Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest

சுய ஆய்வு பயிற்சித்தாள்: எதிர்மறைத் தகவல்கள் எங்கிருந்து வருகின்றன

உங்களுக்குள் எதிர்மறைகள் எங்கிருந்து எழுகின்றன என்பது இந்த பயிற்சித்தாளில் இருக்கும் கேள்விகளுக்கு நீங்கள் ஆழ்ந்து யோசித்து பதில் எழுதுவதன் மூலம் விளங்கும். இந்த கேள்விகள் லூயிஸ் ஹே அவர்களின் “நல்வாழ்வு நம் கையில்” புத்தகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டவை ஆகும். பலரின் மாற்றத்திற்கு உதவிய இந்த பயிற்சி உங்களுக்கும் நன்மையே செய்யட்டும்.

உங்களுடைய பெற்றோர்கள் சொல்லிய தவறான விஷயங்களாக நீங்கள் கருதுபவற்றை ஒரு தாளில் பட்டியலிட வேண்டும். நீங்கள் கேட்ட அந்தத் தவறான செய்திகள் என்னென்ன? நிறைய அவகாசம் எடுத்துக் கொண்டு, ஆழமாக யோசித்து, எவ்வளவு முடியுமோ அத்தனை தகவல்களையும் ஒன்று விடாமல் எழுதுங்கள். இதற்கு சுமார் அரைமணி நேரம் போதும்.

பணம் பற்றி அவர்கள் என்ன சொன்னார்கள்?

உங்களுடைய உடல் குறித்து அவர்கள் என்ன கூறினார்கள்?

அன்பு, உறவுகள், சொந்தங்கள் பற்றியெல்லாம் என்னென்ன கூறியிருக்கிறார்கள்?

உங்களுடைய ஆக்கபூர்வமான திறமைகள் பற்றி என்ன சொன்னார்கள்?

உங்களை ஆட்டிப்படைக்கும் அல்லது படைத்த அல்லது எதிர்மறையான விஷயங்கள் என்று எவற்றையெல்லாம் குறிப்பிட்டார்கள்?

உங்களால் முடிந்தால் பாரபட்சமின்றித் திறந்த மனதுடன் இவற்றை எல்லாம் வாசித்துப் பார்த்து, “ஓ இங்கிருந்துதான், இந்த நம்பிக்கைகள் உருவாகியுள்ளன” என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக புதியதொரு தாளை எடுத்துக் கொண்டு, இன்னும் கொஞ்சம் ஆழமாக ஆராய்வோம்.

நீங்கள் குழந்தையாக இருந்த சமயத்தில் வேறு என்னென்ன எதிர்மறைத் தகவல்களை கேட்டீர்கள்?

உறவினர்களிடமிருந்து….

ஆசிரியர்களிடமிருந்து….

நண்பர்களிடமிருந்து….

உங்கள் மீது அதிகாரம் செலுத்தியவர்களிடமிருந்து….

உங்களுக்கு மத போதனை செய்தவர்களிடமிருந்து….

இவையனைத்தையும் அந்தத் தாளில் எழுதிக் கொள்ளுங்கள். தேவையான நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி எழுதும் போது உங்கள் உடலில் என்னென்ன உணர்வுகள் பொங்குகின்றன என்பதை கவனியுங்கள்.

இந்த இரண்டு காகிதங்களிலும் நீங்கள் எழுதியுள்ள அத்தனை விஷயங்களும் உங்களுடைய நினைவிலிருந்து அடியோடு அப்புறப்படுத்தப்பட வேண்டியவை.

“நான் பயனற்றவன், என்னுள் எந்த தனித்துவமும் இல்லை, திறமைகளும் இல்லை” என்ற உணர்வு உங்களுக்குள் உருவாக்கியவைதான் இந்த நம்பிக்கைகள்.

நல்ல விஷயங்களை பகிர்ந்து உதவுங்கள்!

Editorial Team

Editorial Team

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Top Posts

புத்தக புதையல்

உங்கள் தர்மத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? – “போதியின் நிழல்” உணர்த்தும் வாழ்க்கைப் பாடம்

வாழ்க்கையில் தாம் எடுத்த காரியத்தை செவ்வனே முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் ஆயிரத்தில் ஒருவராகவே இருப்பர். அதிலும் அந்த காரியம் பெரியதாக …

Read More →

நிறைவான வாழ்க்கையை உறுதி செய்யும் டாக்டர் வேய்ன் டயரின் 7 புத்தகங்கள்

வாழ்க்கையின் எந்தவொரு பிரச்சினைக்கும் ஒரு ஆன்மீக தீர்வு உண்டு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? ஆன்மீகம் என்றாலே பயந்து பின்வாங்குபவர்களுக்கு …

Read More →

வாழ்க்கையின் ஒரு அரிய உண்மையை விளக்கும் ‘மூங்கிலின் கதை’

“என்னப்பா வாழ்க்கை எப்படி போகிறது” என்ற கேள்விக்கு எப்போதுமே நம் பல பேரிடம் இருக்கும் பதில், “அது எங்கேப்பா.. அப்படியே …

Read More →

எனது கதை

வாழ்க்கையில் லட்சியத்துடன் இரு, வெற்றியை நோக்கி ஓடு என்ற அறிவுரைகளை கேட்டு வளர்பவர்கள் தான் நாம். சமூகம் சொல்லும் விதிகளை, …

Read More →

உன் கையில்தான் மகனே…

ஒரு சிறுவன் தன் தாயிடம் சென்று “அம்மா யாரம்மா அந்த முதியவர், அந்த மலை மேல் உட்கார்ந்து கொண்டு தவம் …

Read More →

பொன்விதி தெரியுமா உங்களுக்கு?

உலகில் எல்லாவற்றிலும் எல்லாவர்க்கும் நன்மை பயக்க எல்லா மதங்களும் பின்வரும் ஒரு விஷயத்தை போதிக்கின்றன. இதனை நாம் “பொன் விதி” …

Read More →

மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள் புத்தகத்தை வாங்கி பயன்பெறுங்கள்!!

Scroll to Top